Monday, August 25, 2008

நன்னூல்

எழுத்திலக்கணம்

1) எண் 2)பெயர் 3) முறை 4) பிறப்பு 5) உருவம் 6) மாத்திரை 7) முதல் நிலை 8) கடை நிலை 9) இடை நிலை 10)போலி 11) பதம் 12) புணர்ச்சி

ஆகிய பன்னிரு பகுதிகளைக் கொண்டது எழுத்திலக்கணம்.

1 - 10 - எழுத்தின் அகத்திலக்கணம் - எழுத்தியல்
11 - 12 - எழுத்தின் புறத்திலக்கணம் - பதவியல் , புணரியல்(உயிரீற்று, மெய்யீற்று, உருபீற்று)


1) எண்

மொழிக்கு முதல் காரணமும் அணுத்திரளின் காரியமுமாகிய ஒலியே எழுத்து எனப்படும்.

முதல் எழுத்து, சார்பெழுத்து என இரு வகைப்படும்.


முதல் எழுத்து
உயிர் - 12
மெய் - 18
மொத்தம் - 30

சார்பெழுத்து
1) உயிர்மெய்(216) 2) ஆயுதம்(8) 3) உயிரளபெடை(21) 4) ஒற்றளபெடை(42) 5) குற்றியலிகரம்(37) 6) குற்றியலுகரம்(36) 7)ஐகாரக்குறுக்கம்(3)
8)ஔகாரக்குறுக்கம் (1) 9) மகரக்குறுக்கம்(3) 10) ஆய்தக் குறுக்கம்(2) (369)


2) பெயர்

1) இடுகுறிப் பெயர் 2) காரணப் பெயர்

1) பொதுப் பெயர் 2) சிறப்புப் பெயர்

மரம் - இடுகுறி பொதுப் பெயர்
மா, பலா - இடுகுறி சிறப்புப் பெயர்


அ- ஔ - உயிர் எழுத்துகள் (12) க் - ன் - மெய் எழுத்துகள்(18)

அ, இ, உ, எ, ஒ - குறில்(5) ஆஈஊஏஓஐஔ - நெடில் (7)


அ, இ, உ - சுட்டு

எ, யா - மொழி முதல் வினா ஆ, ஓ - மொழி இறுதி ஏ - இருவழி

க,ச,ட,த,ப,ற - வல்லினம் ங, ஞ, ண, ந, ம, ன - மெல்லினம் ய, ர, ல, வ, ழ, ள - இடையினம்

No comments: